நல வாரியத்தில் தொழிலாளர்களை உறுப்பினர்களாக சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 27, 2020

நல வாரியத்தில் தொழிலாளர்களை உறுப்பினர்களாக சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை,ஆக.27, தொழிலாளர்களை நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்கும் நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.


நல வாரியங்களில் பதிவு செய்யப்ப டாத பிற தொழிலாளர்களுக்கும் நிவா ரண உதவி வழங்க கோரி கட்டுமான தொழிலாளர் சங்கம், ஆட்டோ ஓட்டு நர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்கள் சங்கங்களின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு கள் தொடரப்பட்டன.


இந்த வழக்குகளை, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில் நல வாரியங் கள் மூலம் வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. மனுதாரர்கள் தரப்பில், ‘நல வாரியங் களில் உறுப்பினர்களாக உள்ள வர்களுக்கு மட்டுமே அரசு வழங்கிய நிதி கிடைத்துள்ளது. நல வாரியங்களில் உறுப்பினர் பதிவை புதுப்பிக்காதவர்க ளுக்கு அரசின் உதவிகள் கிடைக்கவில்லை’ என வாதிடப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘தகுதியான தொழிலாளர் களை நல வாரியங்களில் உறுப்பினர்க ளாக சேர்க்கும் நடைமுறையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அதே நேரம், ஒரு சில நல வாரியங்களில்தான் உறுப்பினர்கள் மட்டுமே முறையாக தங்களது பங்களிப்பு தொகையை வழங் கியுள்ளனர். எனவே, நிவாரண உதவியை எதிர்பார்க்கும் உறுப்பினர்கள், நல வாரி யத்துக்கு வழங்க வேண்டிய பங்களிப்பை முறையாக செலுத்த வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


No comments:

Post a Comment