மலேசியாவில் பெரியார் நூல்கள் அன்பளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 22, 2020

மலேசியாவில் பெரியார் நூல்கள் அன்பளிப்பு


மலேசியா நாட்டில் பள்ளிக்கூடங்கள் சூலய்த் திங்கள் மத்தியில் இருந்து செயல்படுகின்றன. தந்தை பெரியார், தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி மற்றும் திராவிட இயக்க தலைவர்களின் கட்டுரைகள் அடங்கிய நூல்கள், பெரியார் பிஞ்சு இதழ்கள், பெந்தா நகர் உயர் நிலைப்பள்ளி, மந்தின் நகர், சாலான் ஆகோப் தோட்டம்,  பிராபர்டான் தோட்டம்   தொடக்கநிலைப் பள்ளிகளை சேர்ந்த சுமார் இருநூறு மாணவர்களுக்கு மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவரும், தோட்ட நிர்வாகிகள் மன்றத் தலைவருமான மு.கோவிந்தசாமி நூல்களை வழங்கினார்.  முதுபெரும் பெரியார் பெருந்தொண்ட ர்கள் கோ.ஆவுடையார், கு.க.இராமன் ஆகியோர் இந்த நிகழ்வுகளின் கலந்து சிறப்பித்தார்கள்.


No comments:

Post a Comment