விமான நிலையங்களை தனியார் மயமாக்கி மாநில உரிமை, தன்னாட்சியைப் பறிப்பதா?
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கண்டனம்
சென்னை,ஆக.22, தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் டுவிட் டர் பதிவில் குறிப்பிட் டுள்ளதாவது: விமான நிலையங்களை தனி யார்மயமாக்கும் மத்திய அரசின் ஒருதலை பட்சமான முடிவானது, மாநில அரசிட மிருந்து அதன் உரிமையையும் தன்னாட்சியையும் பறிப்பதாகும். விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் எந்தவொரு முடிவும் மாநில அரசுடன் கலந்தாலோசிக்கப்பட்டே எடுக்கப் படும் என்ற 2003ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உறுதியை மீறுவதாகும்; இம்முடிவைத் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட் டுள்ளார்.
No comments:
Post a Comment