விஷவாயு தாக்கியதில் தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 17, 2020

விஷவாயு தாக்கியதில் தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு


ராசிபுரம், ஆக. 17- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் முனியப் பம்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். கூலித்தொழி லாளி. இவர் பட்டணம் முனியப்பம்பாளையம் இந்திரா நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த பணி யில் தொழிலாளர்கள் ஈடு பட்டு வந்தனர். இந்த நிலை யில் நேற்று தொழிலாளி முரு கேசன் (வயது45) என்பவர் 8 அடி ஆழமுள்ள நிலத்தடி தண்ணீர் தொட்டியில் உள்ள மரப்பலகை மற்றும் முட்டுக் களை அகற்றுவதற்காக தொட்டிக்குள் இறங்கினார். அப்போது திடீரென விஷ வாயு தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார்.


இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர் களான சஞ்சய் (22), தவ முருகன் (35), ஆறுமுகம் (32), சிரஞ்சீவி (19) ஆகிய 4 பேர் ஒவ்வொருவராக தொட்டிக் குள் இறங்கினர். அப்போது அவர்களையும் விஷவாயு தாக்கியது. இதில் அடுத்தடுத்து அனைவரும் மயங்கினர்.


இதுபற்றி அந்த பகுதி மக்கள் உடனடியாக காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீய ணைப்பு துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு, தொழிலாளிகள் 5 பேரும் மீட்டு சிகிச்சைக்காக ராசி புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு முருகேசன், சஞ்சய் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


 மற்ற 3 பேரும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்க ளுக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. தண்ணீர் தொட்டிக்குள் விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகளின் உயிரிழப்பு ராசிபுரம் பகுதி யில் பெரும் சோகத்தை ஏற் படுத்தி உள்ளது.


No comments:

Post a Comment