தமிழ்நாட்டில் இந்தி மொழியா?
வங்கிகளில் இந் தியைக் கட்டாயமாக்கும் நடவடிக்கைகள், வங்கி ஊழியர்களிடம் திணிப்பு தொடர்ந்து கொண்டி ருக் கின்றன. வாடிக்கையாளர் களிடம் இந்தியைத் திணிக்கும் போக்கையும் வங்கிகள் தொடங்கிவிட்ட தாகத் தெரிகிறது. கனரா வங்கியில் இந்தி குறித்து நீதிபதி கிருஷ்ணசாமி அய்யர், காந்தியார், டாக்டர் சம்பூர்னானந்த் ஆகியோர் கூறிய வற்றை தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் அறிவிப்பாக வைத்துள்ளனர். தமிழ் நாட்டில் சட்டப்பூர்வமாக இருமொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பதை அறியாத வர்களா இவர்கள்?
இதுபோன்ற நடவடிக்கைகள் இந்தியைத் திணிப்பதைத் தீவிரமாக்கிவருவதற்கான சான்றாக உள்ளன. தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டிய தருணம் இது.
No comments:
Post a Comment