புதுவையில் வாழ்ந்து கொண்டிருக்கும், தனித்தமிழ் இயக்கத் தலைவர் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மருமகன் சொல்லாய்வு அறிஞர் அருளி அவர்களின் வாழ்விணையர் தேன்மொழி அவர்கள் உடல் நலக் குறைவினால் இன்று மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.
அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தவர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
14.9.2020
No comments:
Post a Comment