ஊழலோ ஊழல்!
விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தில் ரூ.110 கோடி முறைகேடு அம்பலம். 37 அதிகாரிகள் இடைநீக்கம் - 80 அலுவலர்கள் பணிநீக்கம்.
விவசாயிகளுக்கு தவணை ஒன்றுக்கு ரூ.2000 வீதம் மூன்று தவணைகளில் ரூ.6000 அளிக்கும் பிரதமரின் கிசான் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது. இதில்தான் இந்த முறைகேடு நடந்திருக்கிறது. அரசுத் துறையினரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர்.
கடவுள் எங்கும் இருக்கிறார் என்பது பொய் - ஊழல் எங்கும் நிறைந்திருக்கிறது என்பதே மெய். வாக்குக்குப் பணம் கொடுப்பது - பணம் வாங்கிக் கொண்டு வாக்களிப்பது என்பதிலிருந்தே ஊழல் தொடங்கிவிட்டதே. இந்த மனநிலை உள்ளவரை ஊழல் ஒய்யாரமாகத்தான் நடைபோடும்.
No comments:
Post a Comment