பற்பல நூல்களைப் படிக்கும்போது, பல புதிய சொல்லாராய்ச்சி மூலம் எளிதாக விளக் கும் தமிழ் அறிஞர்கள் - முற்போக்கு சிந்தனை யாளர்களின் சீரிய ஆய்வு மூலம் கிடைத்த சில சொற்களை அவ்வப்போது ‘ஆய்வுத் திரட் டாக' நான் குறித்து வைத்துக் கொள்வதுண்டு.
தமிழில் குறிப்பாக பேராசிரியர்கள் தொ.பரமசிவன், ஆ.சிவசுப்ரமணியன் ஆகியோ ரின் பல நூல்கள் இப்படி பல அரிய செய்தி களையும், சொல் விளக்கங்களையும், கருத்து விளக்கங்களையும் நமக்கு அளித்துள்ளன. அவை நம் அறிவை விரிவு செய்து கொள்ள பெரிதும் பயன்படுகின்றன.
அப்படி குறித்தவைகளில் சிலவற்றை “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'' என்பதற்கேற்ப, உங்களோடு பகுத்துண்ணும் இந்த வாய்ப்பு நல்வாய்ப்புதானே!
பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களின் நூல் மூலம்தான் ‘கிராமம்' என்ற பகுதி - எப்படி அந்தப் பெயர் பெற்றது என்பது விளங்கிற்று.
மன்னர்கள் குறிப்பாக, பிற்கால சோழ மன் னர்களால் எங்கெல்லாம் பார்ப்பனர் குடியேறி ஊர் அமைத்து வாழ்ந்தார்களோ அதற்கு ‘மங் கலம்‘ என்று பெயர் பெற்றது.
நான்கு வேதம் பயின்றவர்களுக்கு அக்கால மன்னர்கள் அளித்த நிலக்கொடை - ஊரா யிற்று - சதுர்வேதி மங்கலம், மூன்று வேதம் பயின்றோர் - திவேதி (மங்கலம்), இரண்டு வேதம் பயின்றோர் - துவேதி (மங்கலம்).
வேதப் படிப்பினை நடுவில் விட்டவர்க ளுக்கு (Drop outs - இடைநின்று விட்டோ ருக்கு) அளிக்கப்பட்டவையே ‘கிராமங்கள்' என்பவை என தொ.ப. அவர்கள் எழுதி யுள்ளார்கள்.
கிராமங்களும், நகர்ப்புறங்களுக்கான அத் துணை வசதிகளையும் பெற்றவையாகவே இருக்க வேண்டுமென சிந்தித்து, ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் தமது குடியரசுத் தலைவர் பதவிக் காலத்தில் ‘PURA' (Providing of Urban Amenities to Rural Areas) என்ற ஒரு திட்டத்தை அவர் சிந்தித்து செயல்படுத்தினார்.
தந்தை பெரியார், இதனை 1944-லேயே ஈரோட்டில், ஒரு பொதுக் கூட்டத்தில் ‘கிராமச் சீர்திருத்தம்' என்ற தலைப்பில் பேசியது சிறு புத்தகமாகி இது வரை பல பதிப்புகள் - பல லட்சம் பரவியுள்ளது.
அதனை மக்கள் பல்கலைக்கழகமான தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் 69 சுற்று வட்டார கிராமங்களை பல்கலைக்கழகம் தத்து எடுத்து, செயல்படுத்தியதைக் கேள்விப்பட்டு, குடியரசுத் தலைவராகப் பொறுப்பு வகித்த ஏ.பி.ஜே.அப்துல் கலாம் வல்லத்துக்கு வந்து பார்த்துப் பரவசப்பட்டுப் பாராட்டி, தான் எழுதிய நூலிலும் சிறப்பாகப் பதிவும் செய்து உள்ளார்! ‘Target 3 Billion' என்ற தலைப்பில் வெளிவந்த நூல் அந்த நூல்.
அவர் தஞ்சை-வல்லம், பெரியார் மணி யம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்திற்கு 5, 6 முறை வந்து பாராட்டி ஊக்கப்படுத்தியுள்ளார்.
அப்போது ஒரு முறை ‘கிராமம்' என்ற சொல் எப்படி வந்தது என்பது பற்றிய தொ.ப.வின் விளக்கம் பற்றிக் கூறினேன். அப்துல் கலாம் மிகவும் வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்தார்!
பேராசிரியர் தொ.ப. அவர்கள் ஆழ்ந்த நுண்ணறிவு சார்ந்த புலமை மிக்கத் தனித்தன் மையாளர். அவர் ஒரு தீவிர பெரியாரிஸ்ட் அல்லவா? அதுவும் அவரது சுதந்திர சிந்த னைக்கும், சொல்லாராய்ச்சிக்கும் பெரிதும் துணை நிற்கின்றன போலும்!
பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களது ‘விடுபூக்கள்' நூலில் (பக்கம் 54-55 இல்) சில அருமையான சொல் விளக்கங்கள் நமக்குக் கிடைக்கின்றன.
- “இறை” என்ற சொல்லுக்கு “வரி” என்பதும், ‘மிகை' என்பதும் முதற் பொருளாகும்.
வரி பெறும் அரசனுக்கு இறைவன் என்று பெயர்.
சங்க இலக்கியத்திலேயே பார்ப்பனரை உயர்த்திக் கூறும் புறநானூற்றுப் பாடல் ஒன்றில், அரசன் ‘இறைவன்' என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றான்.
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு (குறள் 733).
என்று அரசனுக்கு முறையாக “வரி'' (இறை) செலுத்த வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
கோயில் = கோ + இல் - ‘கோ'வாகிய அரசனின் இல்லத்தைக் (அரண்மனையை) குறிக்கும் சொல்லாகும்.
“சென்றான் அரசன் செழுங்கோயில்
வாயில் முன்” என்பது சிலப்பதிகாரம்.
‘தெய்வம்', ‘கடவுள்' என்ற சொல் ஒரே பொருளைக் குறிக்கவில்லை. கடவுள் என்ற சொல் (ஒன்றான ‘The' என்ற ஆங்கிலத்தில் குறிக்கப் பெறும்) ஒன்றைக் குறிக்கிறது.
அரசியல் சொல்லாடலில் நாம் இதனை, ‘ஏக ஆதிபத்தியம்' என்று குறிக்கிறோம்.
நிறுவன சமயங்கள் ஆன சைவம், வைண வம், கிறித்துவம், இசுலாம் ஆகியவை எல்லாம், ‘ஒரு கடவுள்' கோட்பாட்டினை உடையன.
* * * * *
கூலி என்ற சொல் பற்றி பார்ப்போமா?
இது ஆங்கில அகராதியில் கூட ‘Coolie' என்று இடம் பெற்றுள்ளது!
இதன் வேர்ச் சொல் (Root) கூலம் (தானி யம்) என்பதையே அடிப்படையாகக் கொண் டதே!
‘கூலி' என்பதற்கு மாற்றாக ‘ஊதியம்', ‘சம் பளம்' என்ற சொற்கள் புழக்கத்தில் உள்ளன.
சம்பளம் - சம்பா நெல்லும் அளத்து உப்பும்
உழைப்பு
பணப்பொருளாதாரம் பெரிதாக இல்லாமல் பண்டமாற்றுப் பொருளாதாரம் நிலவிய வேளாண் சமூகக் காலத்தில் ஏழைத் தொழிலா ளர்கள் பெற்றதே கூலியாகும்! பிற்காலத்தில் கூலி வேலை செய்யும் ஏழை மக்களைக் குறிக்கவும் ‘கூலி' என்ற சொல் பயன்பட்டது.
No comments:
Post a Comment