நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தனித்துறை   அரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 7, 2020

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தனித்துறை   அரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை

மதுரை,நவ.7, தமிழகத்தில் நீர் நிலை ஆக்கிர மிப்புகளை அகற்ற ஏன் தனித் துறை அமைக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.


தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றக் கோரி தாக்கலான மனுக்கள் நீதி பதிகள் என்.கிருபாகரன், பி.புக ழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன.


அப்போது நீதிபதிகள் கூறியதாவது: தமி ழகத்தின் நீர்நிலை களைப் பாதுகாக்க அரசு நட வடிக்கை எடுக்கத் தவறிவிட்டது. நீர்நிலைகளைப் பாதுகாக்க தனித் துறையை ஏற்படுத்தினால் என்ன? அது போல நடவடிக்கையை முன் னெடுக்காவிட்டால் நீர்நிலை களைக் காப்பாற்ற முடியாது மன் னர்கள் நீர் நிலைகளை உருவாக் கினர்.


தற்போது பல நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப் பட்டுவிட்டன. இனிமேலாவது நீர் நிலைகளைப் பாதுகாக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். தவ றினால் வருங்காலத் தலைமுறையினர் குடிநீருக்காகவும், விவசாயத் துக்காகவும் அல்லாடும் நிலை ஏற்படும்.


தமிழகத்தில் 1980-இல் ஆறு, குளம், ஏரி உட்பட எத்தனை நீர் நிலைகள் இருந்தன? தற்போது எத்தனை நீர்நிலைகள் உள்ளன? அரசு நீர் நிலைகளின் எல்லைகளை நிர்ணயம் செய் துள்ளதா? நீர் நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளன? ஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுக் கப்பட்டது? தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏன் தனித்துறை அல்லது தனி அமைப்பை ஏற்படுத்தக்கூடாது? என்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


பின்னர், வழக்கு விசாரணையை நவ. 25-க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


No comments:

Post a Comment