சீறுகிறது சிங்களம்!
இலங்கைக் கடற்படையால் நாகை,காரைக்காலைச் சேர்ந்த 16 மீனவர்கள் சிறைப்பிடிப்பு.
ஏற்கெனவே தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து நொறுக்க இலங்கை அரசு முடிவு - இதுகுறித்து தமிழக அரசோ, மத்திய அரசோ மூச்சுவிடவில்லை.
நம்புங்கள், மத்திய அரசின் அயலுறவுக் கொள்கை வெற்றியோ வெற்றி!
தேவை யோசனையே!
பா.ஜ.க. சதி செய்து தேர்தல்களில் வெற்றி பெற்று வருகிறது: - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு.
அதெல்லாம் சரிதான் - முதலில் உ.பி.யில் பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை சிதறாமல் இருக்க என்ன செய்யலாம் என்று சமாஜ்வாடி கட்சி யோசித்து நடக்கட்டும்!
தூங்குகிறது
மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தை விரைவாக நிறைவேற்றவேண்டும்: - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
நம் நாட்டில் எதில்தான் அரசியல் செய்வது என்ற விவஸ்தையே இல்லை. சென்னை பெருநகரின் போக்குவரத்துக்குப் பெரிதும் பயன்படும் இந்தப் பாலம் தி.மு.க. ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டது என்பதற்காக அன்றைய அ.தி.மு.க. ஆட்சி முட்டுக்கட்டை போட்டது - நீதிமன்றம் வரை பச்சைக் கொடி காட்டியது. இந்நேரம் செயல்பாட்டுக்கு வந்திருக்கவேண்டிய இத்திட்டம், படுத்துத் தூங்குகிறது.
பக்தி அரசியல் உண்மை!
அனுமதியின்றி வேல் யாத்திரையா? பா.ஜ.க.வுக்கு, தமிழக அரசு அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்.
'அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்; நீ அழுவது மாதிரி அழு!' என்ற ஏற்பாட்டோடு நடைபெறுகிறது இந்தப் பக்தி அரசியல் விளையாட்டு என்பதுதான் உண்மை!
No comments:
Post a Comment