20 நாள்களாக தொடரும் விவசாயிகளின் போராட்டம் மத்திய பா.ஜ.க. அரசின் அலட்சியத்தால் நாள்தோறும் ரூ.3,500 கோடி இழப்பு! அசோசெம் அதிர்ச்சித் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 16, 2020

20 நாள்களாக தொடரும் விவசாயிகளின் போராட்டம் மத்திய பா.ஜ.க. அரசின் அலட்சியத்தால் நாள்தோறும் ரூ.3,500 கோடி இழப்பு! அசோசெம் அதிர்ச்சித் தகவல்

 


புதுடில்லி,டிச.16, மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங் களை நீங்க வேண்டும் என தலைநகர் புதுடில்லியை முற்றுகையிட்டு விவ சாயிகள் கடந்த 20 நாட்களாக போராடி வருகின்றனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காத மத்திய பாஜக அரசின் பிடி வாதத்தால் விவசாயிகளின் போராட் டம் நாடு தழுவிய போராட்டமாக மாற்றம் பெற்று வருகிறது.

இதனால், நாட்டில் நாள்தோறும் ரூ.3,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக தெரிய வந்துள் ளது. தொழில்துறை அமைப்பான அசோசெம் வெளியிட்டுள்ள செய்தி யில், கடந்த 20 நாட்களாக டில்லியில் விவசாயிகள் போராட்டத்தினால், தொழில்துறை பாதிப்பினை சந்தித் துள்ளது. தினசரி 3 ஆயிரத்து 500 கோடி வீதம் இதுவரை 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மத்திய அரசு அறிமுகம் செய்த, விவசாயச் சட்டங்கள் மூலம் தங் களின் விவசாய உரிமைகள் பறிக்கப் படும் என விவசாயிகள் குரலெழுப்பி வருகின்றனர். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, இராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதே சத்தைச் சேர்ந்த விவசாயிகள் டில்லியை முற்றுகையிட்டுள்ளனர்.

விவசாயிகள், கால்நடையாகவும், டிராக்டர்கள் மூலமும் சென்று டில்லி செல்லும் அனைத்து சாலை களையும் சென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள இழப்புகளை சரி செய்வது உடனடி தேவையாக உள்ளது. எனவே மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் தொழில்துறை வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விவசாயம், தோட்டக்கலை மற்றும் விவசாய உற்பத்தி சார்ந்த தொழில் துறை நிறுவனங்கள் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக உணவு பதப்படுத்தும் தொழில்கள், பருத்தி, ஜவுளி உற்பத்தி, போக்குவரத்து, பண்ணைத் தொழில்கள் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளன. விவசாய சேவை சார்ந்த அய்.டி. நிறுவனங்களுக்கும் இழப்பு ஏற்படும் கட்டத்தில் உள்ள தாக தொழில்துறை குறிப்பிட்டுள்ளது. டில்லியை முற்றுகையிட்டுள்ளதால், சுற்றுலா, வர்த்தகம், போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட தொழில் களிலும் மிகப்பெரிய தாக்கம் ஏற் படும் என்று அசோசெம் எச்சரித்துள் ளது.

விவசாய தொழில் முனை வோர்கள், விவசாய முதலீடு செய்ப வர்கள், உரம், இடுபொருட்கள் விநி யோக தேவைகளும் முடங்கியுள்ளன. எனவே, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என தொழில்துறை அமைப்பான அசோசெம் வலியுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment