இரு விலங்குகளுக்குள்
ஜாதிய பேதமில்லை
இரு பறவைகளுக்குள்
பாலின பேதமில்லை
பேதங்களை மூலதனமாக்கி
மானுட சமூகத்தில்
பார்ப்பனியம் தொடங்கிய
பெருந்தொழிலே இந்துத்துவம்
சனாதனத்தை காரணம் காட்டி
சமத்துவமின்மையால்
கட்டமைக்கப்பட்டதே இந்துத்துவம்
ஆண்டாண்டு காலமாய்
தொடர்ந்த இந்துத்துவ மரபுகளை
தன் கேள்விக் கணைகளால்
துளைத்தெடுத்தவர் பெரியார்!
எதிர் கேள்வி கேட்கிறவர்களை
வரலாறு நெடுக
கொன்று குவித்த இந்துத்துவம்
முதன் முறையாய் மண்டியிட்டது
பெரியாரிடம் தான்
இந்துத்துவத்தின்
மொழித் திணிப்பிற்கு எதிராய்
தார்ச் சட்டி தூக்கினார்
தமிழ்மொழி காக்க!
இந்துத்துவத்தின்
ஜாதிக்கு எதிராய்
அரசியல் சட்டப் பிரிவை
சாம்பலாக்கினார் இந்துத்துவத்தின்
தீண்டாமைக்கு எதிராய்
சமபந்தி விருந்து நடத்தினார்
இந்துத்துவத்தின்
பாலினப் பாகுபாட்டிற்கு எதிராய்
கல்வியும் சொத்துரிமையும்
பெண்களுக்கு வேண்டுமென்றார்!
இந்துத்துவத்தின்
வர்ண ஆதிக்கம் ஒழிக்க
அனைத்து ஜாதியினரும்
அர்ச்சகராக வேண்டுமென்றார்
இந்துத்துவத்தின்
கலாச்சாரத் திணிப்பிற்கு எதிராய்
சுயமரியாதைத் திருமணங்களை
நடத்தச் செய்தார்
அன்று
பெரியாரைக் கண்டு நடுங்கிய இந்துத்துவம்
இன்று
அவர் சிலைகளைக்கண்டு
நடுங்கிக் கொண்டிருக்கிறது ..
- பாசு. ஓவியச்செல்வன்
No comments:
Post a Comment