தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் மயக்க பிஸ்கட்டுகள் ஓர் எச்சரிக்கை புத்தகம் விநியோகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 15, 2020

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் மயக்க பிஸ்கட்டுகள் ஓர் எச்சரிக்கை புத்தகம் விநியோகம்

தென்சென்னை, டிச. 15- தென் சென்னை மாவட்ட இளை ஞரணி சார்பில் மயக்க பிஸ் கட் ஓர் எச்சரிக்கை புத்தகம் தென்சென்னை மாவட்டம் கோட்டூர்புரத்தில் உள்ள என்.எஸ் கிருஷ்ணன் சிலை அருகில்  தொடங்கி அண்ணா நூலகம் வரை கோட்டூர் மார்க்கெட் வழியாக சென்று பொதுமக்கள் மற்றும் வணி கர்கள் அனைத்துக் கட்சித் தோழர்கள் அனைவரிடமும்  வழங்கப்பட்டது. இந்நிகழ் விற்குதென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வில்வநாதன் தலைமை ஏற்றார்.

மாவட்டச் செயலாளர் பார்த்தசாரதி, சென்னை மண் டல இளைஞரணி பொறுப் பாளர் சுரேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் .மணித்துரை,  மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் .சிவ சீலன்,  இளைஞரணி தோழர்   சண்முகப் பிரியன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தாய்க் கழகம் திராவிடர் கழகத்தின் அழைப்பை ஏற்று திராவிட முன்னேற்ற கழகத் தின் கோட்டூர் பகுதி 172 ஆவது வட்ட செயலாளர் ராஜ்குமார்,  சென்னை கோட் டூர்புரம் 172 ஆவது வட்ட செயலாளர் .மணி,  மறு மலர்ச்சி திராவிட முன்னேற் றக் கழகத்தின் 172ஆவது கோட்டூர் பகுதி வட்டச் செயலாளர் டோமினிக்,  பெரியாரிய உணர்வாளர் இளங்கோ, பெரியாரிய உணர் வாளர் செந்தில் ஆறுமுகம் பெரியார் பெருந்தொண்டர் ராசு, மதிமுகவின் 172ஆவது வட்ட துணைச் செயலாளர் வைகோ ரமேஷ், மதிமுகவின் பொறுப்பாளர் ஜெயவேல், திமுகவின் இளைஞர் அணித் தோழர்கள் பாலாஜி, சரவ ணன்  ஆகியோர் கலந்து கொண் டனர்.

இந்நிகழ்வினை தென் சென்னை மாவட்ட இளை ஞர் அணி பொறுப்பாளர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments:

Post a Comment