மக்களை சிந்திக்க வைக்கும் அளவில் "மயக்க பிஸ்கெட்டுகள்" - ஓர் எச்சரிக்கை என்ற கையடக்க நூல் திராவிடர் கழக தலைமைக் கழகத்தால் வெளியிடப்பட்டது. நூல் விநியோகத்தை கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தலைமையில், மாவட்ட இளைஞரணி செயலாளர் அலெக்சாண்டர் முன்னிலையில், பொதுக்குழு உறுப்பினர் ம. தயாளன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ. சிவதாணு ஆகியோர் தொடங்கிவைத்தார்கள். தோழர்கள் ஆளூர் பேரூராட்சி சுங்கான்கடை என்ற ஊரிலும் அதன் அருகாமையிலும் வீடு வீடாக சென்று வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர், ஒன்றிய கழக செயலாளர் குமாரதாஸ் மற்றும் தோழர்கள் அண்ணா துரை உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment