14 மருத்துவர்கள் ஒரே நேரத்தில் பதவி விலகல்..... சர்வாதிகாரமாக நடக்கும் உ.பி. அரசு உயர் அதிகாரிகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 16, 2021

14 மருத்துவர்கள் ஒரே நேரத்தில் பதவி விலகல்..... சர்வாதிகாரமாக நடக்கும் உ.பி. அரசு உயர் அதிகாரிகள்!

லக்னோ, மே 16 பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில், 14 அரசு மருத்துவர்கள் ஒரேநேரத்தில் தங்களின் பதவி விலகி   பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். .பி. மாநிலம் உன்னாவ் மாவட்டத்திலுள்ள ஆரம்ப சுகாதார மய்யம் மற்றும் சமூக சுகாதார மய்யங்களில் பணியாற்றி வந்த இந்த 14 மருத்துவர்களும், அரசுக்கு அனுப்பியுள்ள தங்களின் பதவி விலகல் கடிதங்களில் கூறியிருப்பதாவது: ‘இந்த கரோனா பெருந் தொற்று காலத்தில் அதிகப்படியான வேலைப்பளுவில் இருந்து வருபவர்கள் முன்களப் பணியாளர் களான மருத்துவர்களும் செவிலியர்களும்தான். ஆனால், இப்படியான வேலைப்பளுவுக்கு மத்தியிலும் அரசின் உயர் நிர்வாக அதிகாரிகள் சர்வாதிகார அணுகுமுறையை கடைப்பிடித்து தண்டனை உத்தரவுகளை பிறப்பித்து வந்தனர். அநாகரிகமாக நடந்து கொண்டனர்.

24 மணி நேரமும் சுழற்சி முறையில் வேலை செய்தாலும், வேலை  செய்யவில்லை என அவமானப்படுத்துகின்றனர். எனவே, "நாங்கள் பணியிலிருந்து விலகுகிறோம்!" என்று கூறியுள்ளனர். இந்த செய்தி .பி. மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உன்னாவ் மாவட்ட ஆட்சியர் அவசர அவசரமாக பேச்சு வார்த்தை நடத்தி மருத்துவர்களை சமா தானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

No comments:

Post a Comment