சீரம் நிறுவனம் பிற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்க உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 19, 2021

சீரம் நிறுவனம் பிற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்க உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தல்

நியூயார்க், மே 19 இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்த பிறகு சீரம் நிறுவனம் பிற நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவன தலைவர் கூறியுள்ளார்.

உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் ஆதனம் இணையவழியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி வழங்குவதற்காக உலக சுகாதார நிறுவனத்தின்கீழ் கோவேக்ஸ் என்ற அமைப்பு செயல்படுகிறது. தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள், தாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு கட்டுப்பட்டு இந்த அமைப்புக்கு தடுப்பூசிகளை வழங்கி வருகின்றன.

 ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட் ராஜெனேகா கூட்டு தயாரிப்பான தடுப்பூசியை இந்தியாவை சேர்ந்த சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் உற்பத்தி செய்து வருகிறது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், கோவேக்ஸ் அமைப்புக்கு சீரம் நிறுவனத்தால் தடுப்பூசி அனுப்ப முடியவில்லை. எனவே, இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்த பிறகு, ஏற்கெனவே அளித்த உறுதிமொழியை சீரம் நிறுவனம் காப்பாற்ற வேண்டும். கோவேக்ஸ் அமைப்புக்கு தடுப்பூசிகளை அளிக்க வேண்டும்.

பைசர் நிறுவனம் இந்த ஆண்டு 4 கோடி டோஸ் தடுப்பூசிகளும், மாடர்னா நிறுவனம் அடுத்த ஆண்டு 50 கோடி டோஸ் தடுப்பூசிகளும் வழங்குவதாக உறுதி அளித்துள்ளன என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment