நீதிபதிகளின் எரிச்சல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 19, 2021

நீதிபதிகளின் எரிச்சல்!

புதுடில்லி, மே 19 நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை. ஆக்சிஜன் பற்றாக் குறை, தடுப்பூசிகள் பற்றாக்குறை - இந்த நிலையில் செல்போனில் தடுப்பூசி போடுமாறு விழிப்புணர்வு விளம்பரம் செய்வது எதற்கு என்று சீறியுள்ளனர் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் லிபிங் சங்கி, ரேகாபல்லி.

* ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் உலகில் உயிரிழப்போர் எண்ணிக்கை 13 லட்சம்.

காரணம் கும்பமேளாவே!

புதுடில்லி, மே 19 கிராமப்புறங்களில் கூட கரோனா அதிகம் தொற்றியதற்குக் காரணம் கும்பமேளா தான் என்று கூறியிருக்கிறார். டில்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்திரர் ஜெயின்.

சீனாவிலிருந்து...

சீனாவிலிருந்து 15 கண்டெய்னர்களில் தமிழ் நாட்டுக்கு ஆக்சிஜன் வருகிறது என்று தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

ஒரு தகவல்

சென்னையில் ஒரே இடத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள், அடுக்குமாடி குடியிருப் போர் நலச் சங்கத்தினர் மற்றும் பிற குழுக்கள் 45 வயதுக்கும் அதிகமானவர்கள் ஒரே இடத்தில் இருந்தால் - தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்பினால், மாநகராட்சியை அணுகலாம். தொடர்புக்கு 044-46122300

இடதுசாரிகள் நிதி

கரோனா - நிவாரண நிதியாக தமிழ் மாநில இந்திய கம்யூனிஸ்ட் - சி.பி.எம். ஆகிய இரு கட்சிகளின் பொறுப்பாளர்கள் தலா ரூ.10 லட்சம் நன்கொடை.

No comments:

Post a Comment