டெக்கான் கிரானிக்க ல், அய்தராபாத்:
· கரோனா தடுப்பூசியை வெளி நாடுகளில் இருந்தும் நேரடியாக மாநிலங்கள் பெறுவதற்கான அனுமதியை மத்திய அரசு தர உள்ளது.
· மக்கள் படும் அவலங்களைக் கண்டு கொள்ளாமல், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் அதிக கவனம் செலுத்துகிறார் என எழுத்தாளர் ஷோபா
தகே குறிப்பிட்டுள்ளார்.
· கரோனா பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் கூறியுள்ள யோசனைகளை மத்திய அரசு நல்ல வண்ணம் எடுத்து செயலாற்றிட வேண்டும் என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
· பீகார், உ.பி. கங்கை
நதியில் 2000 சடலங்கள் மிதந்து வந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இது குறித்து இரு அரசுகளும் மக்கள் ஆற்றில் சடலங்களை வீசுவதைத் தடுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை
அறிவுறுத்தியுள்ளது.
பி.பி.சி. நியூஸ்
தமிழ்:
தமிழ்நாட்டில்
கரோனா பரவலின் வேகத்தைக் கட்டுப் படுத்த ஊரடங்கு விதிகளைக் கடுமையாக்கியிருக்கிறது தமிழ்நாடு அரசு. அதன்படி மே 15ஆம் தேதி முதல் புதிதாக சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.
டெக்கான்
ஹெரால்டு:
· நாட்டில்
பிரதமர், உள்துறை அமைச்சர், இருக்கிறார்கள். நிர் வாகம் இருக்கிறது. ஆனாலும் ராமன் செயல் என்று அரசு வெறுமனே உள்ளது என சிவசேனா தலைவர்
சஞ்சய் ரவுட் சாடியுள்ளார்.
- குடந்தை
கருணா
15.5.2021
No comments:
Post a Comment