ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களின் தாயார், கரு.கருப்பாயி அம்மாள் (வயது 87) அவர்கள் வயது மூப்பு காரணமாக இயற்கையெய்தினார்.
சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கழகத் தோழர்கள், அமைச்சரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தபோது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விடுதலையில் எழுதிய இரங்கல் செய்தி பற்றியும், செல்பேசியின் வாயிலாக பேசி ஆறுதல் சொன்னதையும் அமைச்சர் நினைவு கூர்ந்தார். நிகழ்வில் மாவட்டச் செயலாளர் பெரு.இராசாராம், மாவட்ட துணைத் தலைவர் ஜெ.தனபாலன், கழக ஆதரவாளர்கள் காத்த நாராயணன், கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment