தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவரும், முதுபெரும் பெரியார் பெருந் தொண்டருமான மாரண்டஅள்ளி தோழர் மானமிகு கிருஷ்ணன் (வயது 82) அவர்கள் உடல்நலக் குறைவால், சேலம் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று (7.5.2021) மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயருருகிறோம்.
மறைந்த தோழர் கிருஷ்ணன் அவர்கள் இயக்கத்தின் அடக்கமான, உறுதியான செயல்வீரர், பல போராட்டங் களில் சிறை சென்றவர்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், இயக்க உறவுகள் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும்
தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு நமது வீர வணக்கம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
8.5.2021

No comments:
Post a Comment