கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 28, 2021

கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (28.6.2021) தலைமைச் செயலகத்தில், கஜா புயலால் வீடுகளை இழந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மேற்கு பிராந்தியங்கரை, பெரிய கோவில்பத்து மற்றும் கண்ணறிந்தான் கட்டளை ஆகிய கிராம மக்களுக்காக சென்னை, ஒய்.எம்.சி.ஏ. - வால் பிராந்தியங்கரையில் கட்டப்பட்டுள்ள 109 வீடுகள் மற்றும் 1000 பேர் அமரக்கூடிய சமூகநல மண்டபம் ஆகியவற்றை பயனாளிகளுக்கு வழங்கும் அடையாளமாக, அவ்வீடுகளுக்கான சாவிகளை 5 குடும்பங்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில், சென்னை - ஒய்.எம்.சி.ஏ. தலைவர் முனைவர் வின்சென்ட் ஜார்ஜ், பொருளாளர்   மார்ட்டின் கென்னடி, பொதுச் செயலாளர்   

பா. ஆசிர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment