ஜம்மு, ஜூன் 23- இந்த ஆண்டும் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டதால் வருமானம் போய்விட்டதாக கோவில் நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் உள்ள பனிக் குகையில் தானே உருவாகும்(?) பனி லிங்கத்தைத் தரிசனம் செய்ய லட்சக்கணக்கானோர் ஆண்டுதோறும் வருவது வழக்கமாகும். கரோனா பரவல் காரணமாகச் சென்ற ஆண்டு அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டது.
தற்போது இரண்டாம் அலை பரவல் இன்னும் முழுமையாக குறையாததால் இந்த ஆண்டும் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக கரோனாவால் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் ஆண்டும் அமர்நாத் யாத்திரை ரத்து ஆனதால் வர்த்தகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனராம்.
இது குறித்து கோவில் நிர்வாகம் கூறும் போது “அமர்நாத் யாத்திரை காலத்தில் பக்தர்கள் அதிகம் வருவதால் நல்ல வருவாய் கிடைக்கும், இந்த ஆண்டு யாத்திரை நடக்க அரசு அனுமதி தரும் என எதிர்பார்த்தோம். ஆனால் அது ரத்து செய்யப்பட்டதால் வருவாய் கடும் பாதிப்புக்கு உள்ளாகி மேலும் வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித் துள்ளது.
(குறிப்பு: கோவில்களுக்குப் போவது ஒரு வகை ஃபேஷன். பக்தர்கள் பெரும்பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை அதாவது ‘பிசினஸ்' மனப்பான்மை காணப்படுகிறது.
- 1976 மே மாதம் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அகில இந்திய ஹிந்து மாநாட்டில் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி). ‘வருமானம் போச்சே' அமர்நாத் யாத்திரை ரத்தால்
கவலை கொள்ளும் அமர்நாத் கோவில் நிர்வாகம்!
ஜம்மு, ஜூன் 23- இந்த ஆண்டும் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டதால் வருமானம் போய்விட்டதாக கோவில் நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் உள்ள பனிக் குகையில் தானே உருவாகும்(?) பனி லிங்கத்தைத் தரிசனம் செய்ய லட்சக்கணக்கானோர் ஆண்டுதோறும் வருவது வழக்கமாகும். கரோனா பரவல் காரணமாகச் சென்ற ஆண்டு அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டது.
தற்போது இரண்டாம் அலை பரவல் இன்னும் முழுமையாக குறையாததால் இந்த ஆண்டும் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக கரோனாவால் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் ஆண்டும் அமர்நாத் யாத்திரை ரத்து ஆனதால் வர்த்தகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனராம்.
இது குறித்து கோவில் நிர்வாகம் கூறும் போது “அமர்நாத் யாத்திரை காலத்தில் பக்தர்கள் அதிகம் வருவதால் நல்ல வருவாய் கிடைக்கும், இந்த ஆண்டு யாத்திரை நடக்க அரசு அனுமதி தரும் என எதிர்பார்த்தோம். ஆனால் அது ரத்து செய்யப்பட்டதால் வருவாய் கடும் பாதிப்புக்கு உள்ளாகி மேலும் வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித் துள்ளது.
(குறிப்பு: கோவில்களுக்குப் போவது ஒரு வகை ஃபேஷன். பக்தர்கள் பெரும்பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை அதாவது ‘பிசினஸ்' மனப்பான்மை காணப்படுகிறது.
- 1976 மே மாதம் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அகில இந்திய ஹிந்து மாநாட்டில் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி).
No comments:
Post a Comment