கரோனா பாதிப்பு அதிகரிப்பு: கேரளாவில் 2 நாட்கள் முழு ஊரடங்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 30, 2021

கரோனா பாதிப்பு அதிகரிப்பு: கேரளாவில் 2 நாட்கள் முழு ஊரடங்கு

திருவனந்தபுரம், ஜூலை 30- கேரள அரசு கரோனா வழிகாட்டுதல்களை திருத்தியுள்ளது;  சனி

-ஞாயிறு 2 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப் பட்டு உள்ளது.

கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 6 பேர் கொண்ட குழுவை ஒன்றிய அரசு அனுப்புகிறது. கேரளா வில் எடுக்கப் பட்டு வரும் கரோனா தடுப்பு நடவ டிக்கைகளை ஒன்றிய குழு ஆய்வு செய் யும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.

தற்போது நாட்டிலேயே கேரளாவில் கரோனா பாதிப்பு என்பது மீண்டும் அதிகரித்து வருவது மூன்றாம் அலைக்கான முன்னோட்டம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள் ளது. இதனை உடனடி யாக தடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள் ளது. இதனையடுத்து கேரள அரசு இந்த வார இறுதிநாட்களான ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய 2 தினங் களுக்கு முழு ஊரடங்கு  அறிவித்துள்ளது.

தற்போது நாட்டில் அனைத்து மாநிலங்களி லும் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கமே அமலில் உள்ளது. கேரளா வில் மூன்றாவது முறை யாக மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப் பட உள்ளது.

கேரள அரசு கரோனா  வழிகாட்டுதல்களை திருத்தியுள்ளது, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான (நீட்) அனு மதியை  அடுத்து இப்போது அனுமதிக்கப்பட்ட நாட்களில் ஒளிப்பட நிலையங்களை திறக்க அனுமதிக்கிறது.

 விதைகள் மற்றும் உரங்களை விற்கும் கடை களும் சமீபத்திய அர சாங்க உத்தரவில் அத்தி யாவசிய சேவைகளின் கீழ் வகைப் படுத்தப்பட்டு உள்ளன. பொருளாதா ரம் மற்றும் புள்ளிவிவரத் துறையின் விலைப் பிரிவும் ஒரு அத்தியாவசிய வகையை உள்ளடக்கியது, இதனால் அத்தகைய கடைகள் தேவையான ஊழியர்களு டன் எல்லா நாட்களிலும் திறக்கப்படலாம்.

No comments:

Post a Comment