யாங்கோன், ஆக. 3- மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசை கடந்த பிப்ர வரி மாதம் 1ஆம் தேதி ராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகா ரத்தை கைப்பற்றியது. மேலும் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்து வீட்டு காவலில் வைத்துள்ளது. தேர்தல் முறைகேடு காரண மாக ஆட்சியை கவிழ்த்ததாக ராணுவம் கூறுகிறது.
ராணுவ ஆட்சிக்கு எதிரா கவும், ஆங் சான் சூகிக்கு ஆதர வாகவும் கிளர்ச்சிக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின் றனர். போராட்டத்தை ராணு வம் கொடூரமாக அடக்கிவரு கிறது. இதில், 900க்கும் மேற் பட்ட மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். ராணுவத்தின் அடக்குமுறைக்கு மத்தியில் போராட்டம் நீடிக்கிறது.
இரு ஒருபுறமிருக்க கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. பொருளாதாரம் 18 சதவீதம் வரை சரியும் என உலக வங்கி கணித்துள்ளது.
இந்நிலையில், ராணுவ ஆட் சியின் பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்படுவதாகவும், ஆகஸ்ட் 2023க்குள் தேர்தல் கள் நடத்தப்பட்டு அவசர நிலை நீக்கப்படும் எனவும் ராணுவ தலைவர் உறுதி அளித்துள்ளார்.

No comments:
Post a Comment