இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப்பதக்கம் வென்றார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 4, 2021

இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப்பதக்கம் வென்றார்

டோக்கியோ ஆக 4-  ஜப்பான் தலைநகரில் நடைபெற்று  ஒலிம்பிக் போட்டியில், இன்று நடைபெற்ற  பெண் கள் குத்துச்சண்டை போட்டியில்  இந்திய வீராங்கனை லவ்லினா வுக்கு வெண்கலபதக்கம் கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்தியா 3 பதக் கங்களை பெற்றுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 ஆவது ஒலிம்பிக் போட் டிகள் கரோனா அச்சுறுத் தலுக்கு மத்தியிலும் நடை பெற்று வருகின்றன. இந்த போட்டிகள் கடந்த ஜூலை 23ஆம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  உலக நாடு களைச் சேர்ந்த  11,000 மேற்பட்ட வீராங்கனை கள், வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின் றனர்.  இந்தியா சார்பில் 127 வீரர் வீராங்கனைகள் 18 போட்டிகளில் கலந்து கொண்டு ஆடி வருகின் றனர்.

இன்று நடைபெற்ற  69 கிலோ எடைப்பிரி வின் மகளிர் குத்துச் சண்டை அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா ,துருக்கி வீராங்கனை புஷா னேஸ் கர்மெனஸியை எதிர்கொண்டார். இப் போட்டியில் 0-5 என்ற கணக்கில் லவ்லினா தோற்றதால், வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். உலகின் டாப் வீராங்க னையை இந்திய வீராங் கனை துணிச்சலாக எதிர் கொண்டு விளையாடி னார். இது பெரும் வர வேற்பை பெற்றுள்ளது.

டோக்கியோ ஒலிம் பிக்கில் இதுவரை இந் தியா 1 வெள்ளி 2  வெண் கலப்பதக்கங்களை மட்டுமே  வென்றுள்ளது

No comments:

Post a Comment