இந்திய மகளிர் ஆக்கி அணிக்கு முதலமைச்சர் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 7, 2021

இந்திய மகளிர் ஆக்கி அணிக்கு முதலமைச்சர் வாழ்த்து

சென்னை, ஆக.7-  இந்திய மகளிர் ஆக்கி அணி பதக்கத்தை வெல்லும் அளவிற்கு செயல்திறனை வெளிப்படுத்தினர் என்று முதலமைச்சர் மு..ஸ்டாலின் கூறியுள்ளார்.

32ஆவது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன.  இதில், நேற்று  (6.8.2021) நடைபெற்ற ஒலிம்பிக் மகளிர் ஆக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி இறுதிவரை போராடி இங்கிலாந்து அணியிடம் 4-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்துள்ளது.

இந்தியா 3 கோல்கள் அடித்த நிலையில், இங்கிலாந்து 4 கோல் அடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இப்போட்டியில் முதல் பாதியில் இந்தியா முன்னிலை பெற்று வந்த நிலையில், இரண்டாம் பாதியில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஒலிம்பிக் ஆக்கிப் போட்டியில் இந்தி யாவை முதன்முறையாக அரையிறுதி வரை கொண்டு சென்றதற்கு வாழ்த்துகள் என்று முதலமைச்சர் மு..ஸ்டா லின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஆக்கி அணியினரின் ஆட்டம் பதக்கம் பெற்ற பிறரின் முயற்சிகளுக்கு சற்றும் குறைவில்லாதது. இந்திய மகளிர் ஆக்கி அணி பதக்கத்தை வெல்லும் அளவிற்கு செயல்திறனை வெளிப் படுத்தினர். ஒலிம்பிக் ஆக்கி போட்டியில் இந்தியாவை முதன்முறை யாக அரையிறுதி வரை கொண்டு சென்றதற்கு வாழ்த்துகள். என்று கூறியுள்ளார்.

அனைத்துக் கல்லூரிகளிலும்

ஆகஸ்ட் 9 முதல் இணைய வகுப்புகள்

உயர்கல்வித்துறை உத்தரவு

சென்னை, ஆக.7 அனைத்து கல்லூரிகளிலும் 9ஆம் தேதி முதல் இணைய வகுப்புகளை தொடங்க உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கு இணைய வழியில் பருவத் தேர்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன. தற் போது கரோனா பரவல் தணிந்துள்ள நிலையில் கல்லூரி களை திறப்பது தொடர்பாக உயர்கல்வித் துறை ஆலோ சனை செய்துவருகிறது.

இந்தநிலையில், அனைத்து கல்லூரிகளிலும் 2021-2022 கல்வியாண்டுக்கான இணைய வகுப்புகளை வரும் 9ஆம் தேதி முதல் தொடங்க உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அனைத்து பேராசிரியர்கள், பணியாளர் 9ஆம் தேதி முதல் கல்லூரிகளுக்கு நேரில் வருகை தரவும் உத்தர விடப்பட்டுள்ளது.

பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வருகிற 9ஆம் தேதி முதல் இணைய வகுப்புகள் தொடங் கப்படும் என்று அமைச்சர் .பொன்முடி தெரிவித்தார்.

 

No comments:

Post a Comment