கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருபவருக்கு கரோனா நெகட்டிவ் அல்லது தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 5, 2021

கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருபவருக்கு கரோனா நெகட்டிவ் அல்லது தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத் துறை செயலர் உத்தரவு

சென்னை, ஆக.5 கரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு முறை தடுப் பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் இல்லா மல் கேரளாவில் இருந்து வருபவர்களை தமிழ்நாட்டிக்குள் அனு மதிக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தர விட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் படிப்படியாக குறைந்த கரோனா பாதிப்பு, கடந்த சில தினங்களாக அதிகரித்து வரு கிறது. குறிப்பாக, சென்னை, கோவை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதி கரித்துள்ளது.

20 ஆயிரத்தை கடந்த தொற்று

இதற்கிடையே, அண்டை மாநிலமான கேரளாவில் தினசரி தொற்றுபாதிப்பு 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதையடுத்து, கேரளத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வரு வோரை மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அடுத்தபடியாக இன்று (5.8.2021) முதல் கேரளா  வில் இருந்து தமிழ்நாட்டில் வருபவர்களுக்கு கரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு தவணை தடுப் பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் கட்டாய மாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், அனைத்து மாவட்ட ஆட்சியர் களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது:

தமிழ்நாட்டில் நிலவும் சூழலின்அடிப்படையில், கரோனா வழிகாட்டி நெறிமுறைகள், பரிசோதனை நடவடிக்கைகள், நோயாளிகளைத் தனிமைப்படுத்து வதற்கான வழிமுறைகள், சிகிச்சை மற்றும் வீட்டுக்கு அனுப்புவதற்கான வழிகாட்டுதல்களை மாநில அரசு திருத்தி அமைத்துள்ளது.

அந்த அடிப்படையில், ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல், அண்டை மாநிலமான கேரளத்தில் இருந்து தமிழ் நாட்டுக்கு வருபவர்கள் 72 மணி நேரத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவு களையோ (தொற்று இல்லை என்பதற்கான கரோனா நெகட்டிவ் சான்று) அல்லது இரண்டு முறை கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டற்தான சான்றிதழையோ காட்ட வேண்டும். அத்தகைய சான்றுகள் இல்லாமல் எவரையும் தமிழ்நாடு எல்லைக்குள் அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பணியிட மாறுதல் கோரிய 1,120 காவல்துறையினர் இடமாற்றம்

சென்னை, ஆக.5 தமிழ்நாடு முழுவதும் 1,120 காவல் துறையினரை இடமாற்றம் செய்து காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள் ளார்.

தமிழ்நாடு காவல் துறையில் 1 லட்சத்து 11,897 பேர் பணியில் உள்ளனர். இதில் தலைமைக் காவலர்கள், 2-ஆம் மற்றும் முதல் நிலை காவலர்கள் மட்டும் 86,757 பேர் உள்ளனர். சிறப்பு காவல் படை பிரிவில் 13,526 பேர் உள்ளனர். உதவி ஆய்வாளர்கள் மற்றும் அதற்கும் மேல் பதவியில் உள்ளவர்களைத் தவிர்த்து, தலைமைக் காவலர்கள், இரண்டு மற்றும் முதல் நிலைக் காவலர்கள், சிறப்பு காவல் படை பிரிவினர்கள் என 1 லட்சத்து 283 பேர் தமிழ்நாடு காவல் பணியில் உள்ளனர்.

இவர்களில் ஏராளமானவர்கள் தங்களது சொந்த மாவட்டத்தை விட்டு பிரிந்து, வெளி மாவட்டங்களிலேயே பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் குறிப்பிட்ட சில ஆண்டுகள் வேறு மாவட்டங்களில் பணிபுரிந்த பின்னர் மீண்டும் சொந்த மாவட்டத்திலேயே பணி புரிய அனுமதிக்கப்படுவர்.

பெற்றோர் மற்றும் வாழ்க்கைத் துணையை பிரிந்து வேறு இடங்களில் பணிபுரிபவர்களுக்கு, அவர்களின் விருப்பத்தின்பேரில் இடமாற்றம் வழங்கப்படும். இதற்குகாவலர்கள் தங்களது சுய விருப்பத்தின்பேரில் இடமாற்றம் கேட்டு,காவல் துறை தலைமை அலுவல கத்தில் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பித்த வர்களில் 1,120 காவலர்களுக்கு இடமாற்றம் வழங்கப் பட்டுள்ளது. காவலர்களின் பணியிட மாற்ற உத்தரவை காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு நேற்று வெளியிட்டார்.

பெற்றோர் மற்றும் வாழ்க்கைத் துணையை பிரிந்து வேறு இடங்களில் பணிபுரிபவர்களுக்கு, அவர்களின் விருப்பத்தின் பேரில் இடமாற்றம் வழங்கப்படும்.

புனேவில் இருந்து 2.45 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வருகை

சென்னை, ஆக.5 புனேவில் இருந்து கூடுதலாக 2.45 லட்சம் கோவி ஷீல்ட் தடுப்பூசிகள் நேற்று (4.8.2021) சென்னைக்கு கொண்டு வரப் பட்டன.

 தடுப்பூசி மய்யங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்க, தமிழகத்திற்கு அதிக அளவில் தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்திருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசு, மத்திய தொகுப்பில் இருந்து தமிழ் நாட்டிற்கு தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது.

அதன்படி தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 2 கோடியே 25 லட்சத்து 18 ஆயிரத்து 860 தடுப்பூசிகள் வந்துள்ளன. இதுவரை தமிழ் நாட்டில் சுமார் 2 கோடியே 15 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று புனேவில் இருந்து 21 பெட்டிகளில் 2 லட்சத்து 45 ஆயிரத்து 345 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. 

இதனை தமிழ்நாடு சுகாதாரத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். இந்த தடுப்பூசிகள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கி ருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் தடுப்பூசிகள் பிரித்து வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment