லக்னோ,செப்.5- உத்தரப்பிரதேசத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு சுகாதார மய்யங்களில் வைரஸ் காய்ச்சலால் பாதிக் கப்பட்ட நூற்றுக்கணக் கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பிரோசா பாத் மாவட்டம் மோசமாக பாதிக் கப்பட்டுள் ளது.
இந்த மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வீட்டிலும் தனியார் மருத்துவமனை களிலும் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரோசாபாத் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு 5 பேர் இறந்துள்ளனர்.
இதையும் சேர்த்து கடந்த 3 வாரங்களில் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. இவர் களில் 50 பேர் குழந் தைகள் என்பது குறிப்பிடத் தக்கது.
பக்பாத் மற்றும் முசாபர் நகர் ஆகிய இடங்களிலும் அரசு சுகாதார மய்யங் களிலும் வைரஸ்காய்ச்ச லுக்கு நூற்றுக் கணக் கானோர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அதி காரிகள் தெரிவித்துள்ள னர்.
மேலும், மீரட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் காய்ச்சலுடன் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் புற நோயாளி கள் பிரிவில் சிகிச்சை பெறுவதாக மீரட் மாவட்ட தலைமை மருத் துவ அதிகாரி அகிலேஷ் மோகன் தெரிவித்தார்.
மெயின்புரியில் 8 பேரும் மதுராவில் 13 பேரும் காய்ச்சலால் இறந்துள்ளனர்.
பிரோசாபாத் மருத் துவக் கல்லூரியில் 345 குழந் தைகள் உட்பட 400 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
இதையடுத்து அனைத்து மாவட்டங் களும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளன என்றும் பிரோசா பாத் மாவட்டத்துக்கு மருத்துவத் துறை அதிகாரிகள் அனுப்பப் பட்டுள்ளதாகவும் உத்தரப் பிரதேச சுகாதாரத் துறை இயக்குநர் வேத் விராட் சிங் தெரிவித்தார்.

No comments:
Post a Comment