மும்பை, செப். 29- ‘மெக்கின்சி’ நிறுவனத்தின் ஆய்வு ஒன்றில், மூன்றில் இரண்டு பேர், ‘நியோ பேங்க்’ எனப்படும் ‘டிஜிட்டல் ஒன்லி’ பேங்க் சேவைக்கு மாற தயாராக இருப்பது தெரியவந்து உள்ளது.
கிளைகள் எதுவும் இல்லாமல், இணையதள செயலி வாயிலாக செயல்படும் வங்கிகளை ‘நியோ பேங்க்’ அல்லது டிஜிட்டல் ஒன்லி பேங்க்’ என்கிறார்கள்.தற்போது கிளைகளு டன் செயல்பட்டு வரும் வங்கிகளுக்கு, மிகப் பெரிய சவாலாக மாறிவருகிறது, மிகக் குறைந்த செலவு கொண்ட இந்த, டிஜிட்டல் ஒன்லி பேங்குகள்.இருப்பினும், டிஜிட்டல் ஒன்லி வங்கிகளுக்கு, இளவயதினரிடையே தான் மிகுந்த வரவேற்பு காணப்படுவது ஆய்வின் வாயிலாக தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment