இப்படி ஒரு புத்தகமா? - (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 8, 2021

இப்படி ஒரு புத்தகமா? - (2)

(முன்னுரையின் தொடர்ச்சி இது)

"அந்நூலின் விற்பனையும் வீச்சும் விசுவ ரூபம் எடுத்தன. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிடுகின்ற 'மிக அதிகமாக விற்பனையாகும் நூல்கள்' பட்டியலில் அந்நூல் இடம் பிடித்தது. இது எந்தவொரு நூலாசிரியருக்கும் ஒரு முக்கியமான மைல்கல் என்றால் அது மிகையல்ல. சுமார் 400 வாரங்களுக்கு மேல் அந்நூல் அப்பட் டியலில் நிலை கொண்டிருந்தது. இன்றுவரை எண்பது வெவ்வேறு மொழிகளில் அது மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இன்று உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நூலாசிரியர்களுடைய நூல் களில் அந்நூல்தான் மிக அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இருபதாம் நூற் றாண்டின் தலைசிறந்த பத்துப் புத்தகங்களில் ஒன்றாக அது கருதப்படுகிறது.

'ரசவாதி' புத்தகம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெறும் என்பதை நான் அறிந்திருந்தேனா என்று மக்கள் என்னிடம் தொடர்ந்து கேட் கின்றனர். இல்லை என்பதுதான் அதற்கான நேர்மையான பதில். எனக்கு எந்த யோசனையும் இருக்கவில்லை. ரசவாதி மிகவும் பிரபலமாகும் என்பது எனக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும்? 'ரசவாதி' நூலை நான் எழுத உட்கார்ந்தபோது, நான் என்னுடைய ஆன் மாவைப் பற்றி எழுத விரும் பினேன் என்பது மட்டும் தான் எனக்குத் தெரிந்திருந்தது. என்னு டைய பொக்கிஷத்தைக் கண்டுபிடிப்பதற்கான என் னுடைய தேடலைப் பற்றி நான் எழுத விரும்பினேன். நான் சகுனங்களைப் பின் தொடர்ந்து செல்ல விரும் பினேன். ஏனெனில், சகு னங்கள் கடவுளின் மொழி என்பதை அப்போதே நான் அறிந்திருந்தேன்.

'ரசவாதி' நூல் ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டு இருந்தாலும், அது ஜீவனற்றுப் போய்விடவில்லை. அந்நூல் இன்றும் உயிர்த்துடிப்போடு இருக்கிறது. என்னுடைய இதயத் தையும் ஆன்மாவையும் போலவே, அது தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஏனெனில், என் இதயமும் ஆன் மாவும் அதில் இருக்கின்றன. மேலும், என்னுடைய இதயமும் ஆன்மாவும்தான் உங்களுடைய இதயமும் ஆன்மாவும்கூட. சான்டியாகோ என்ற அந்த இடையன் நான்தான். நான் என்னுடைய பொக்கிஷத்தைத் தேடிப் போய்க் கொண்டிருக்கிறேன். நீங்களும் அந்த இடையன் சான்டியாகோதான். நீங்கள் உங்க ளுடைய பொக்கிஷத்தைத் தேடிப் போய்க் கொண்டிருக்கிறீர்கள். ஒருவருடைய கதைதான் எல்லோருடைய கதையுமாகும்; ஒரு நபரின் தேடல்தான் ஒட்டு மொத்த மனிதகுலத்தின் தேடலுமாகும். இக்காரணத்தால் தான், இத்தனை ஆண்டுகளாக உலகம் நெடுகிலும் பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களால் அந் நூலுடன் தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்துள்ளது. எந்தப் பாரபட்சமும் இன்றி அந்நூல் உணர்ச்சிரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் அவர்களைத் தொட்டுள்ளது.

'ரசவாதி' நூலை நான் மீண்டும் மீண்டும் படிக்கி றேன். நான் அதை முதன் முதலில் எழுதியபோது என்னுள் எத்தகைய உணர் வுகளை நான் உணர்ந்தேனோ, அதே உணர்வுகளை இப் போது நான் அந்நூலைப் படிக்கின்ற ஒவ்வொரு முறை யும் நான் அனுபவிக்கிறேன். நான் மகிழ்ச்சியை உணரு கிறேன். ஏனெனில், நீங்களும் நானும் அதில் ஒன்றுகலந்து இருக்கிறோம். நான் இனி ஒருபோதும் தனியாக இருக்க மாட்டேன் என்ற அறிதலும் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக் கிறது. நான் எங்கு சென்றாலும் மக்கள் என்னைப் புரிந்து கொள்ளுகின்றனர். அவர்கள் என்னுடைய ஆன்மாவைப் புரிந்து கொள்ளுகின்றனர். இது தொடர்ந்து எனக்கு நம்பிக் கையூட்டுகிறது. உலகம் நெடு கிலும் நிகழ்ந்து கொண்டிருக் கின்ற அரசியல்ரீதியான மோதல்கள், பொருளாதார ரீதியான மோதல்கள், மற்றும் கலாச்சாரரீதியான மோதல்களைப் பற்றி நான் படிக்கும் போது, ஓர் இணைப்புப் பாலத்தைக் கட்டுவதற்கான சக்தி நமக்குள் இருக்கிறது என்பது எனக்கு நினைவு படுத்தப்படுகிறது. என்னுடைய அண்டை வீட்டுக்காரரால் என்னுடைய மதத்தையோ அல்லது என்னுடைய அரசியலையோ புரிந்து கொள்ள முடியாவிட்டால்கூட, என்னு டைய கதையை அவரால் புரிந்து கொள்ள முடியும். அவர் என்னுடைய கதையைப் புரிந்து கொண்டால், அவர் என்னிடமிருந்து வெகுதூரம் தள்ளி இல்லை என்று அர்த்தம். ஒரு பாலத்தைக் கட்டுவதற்கான சக்தி எப்போதும் எனக்குள் இருக்கிறது. கருத்து வேறுபாடுகள் நீங்கப் பெற்று மீண்டும் சமாதானம் செய்து கொள்ளுவதற்கு எப்போதும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. என்றேனும் ஒருநாள் நானும் அவரும் ஒரு மேசையைச் சுற்றி ஒன்றாக அமர்ந்து, எங்களுடைய மோதல்களுக்கு ஒரு முடிவு கட்டுவதற்கான ஒரு வாய்ப்பு எப்போதும் இருக்கிறது. அந்த நாளன்று, அவர் தன்னுடைய கதையை என்னிடம் கூறுவார், நான் என்னுடைய கதையை அவரிடம் பகிர்ந்து கொள்ளுவேன்.

- பாலோ கொயலோ

(இதில் பயன்படுத்தப்பட்டுள்ள சில சொற்கள் எமக்கு உடன்பாடில்லாதவை என்றாலும் நூலா சிரியர் கருத்து என்பதால் அதை நீக்காமல் அப்படியே வெளியிட்டுள்ளோம் - அது எனது ஒப்புதல் ஆகாது).

No comments:

Post a Comment