கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரிப்பு; ஒரே மாதத்தில் 4 புதிய ஏவுகணைகளை சோதித்த வடகொரியா... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 4, 2021

கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரிப்பு; ஒரே மாதத்தில் 4 புதிய ஏவுகணைகளை சோதித்த வடகொரியா...

பியாங்யாங், அக். 4- அமெரிக்கா மற்றும் தனது அண்டை நாடான தென் கொரியாவுடனான பதற்றத்துக்கு மத்தியில் வடகொரியா தொடர்ந்து, தனது போர் செயல் திறனை அதிகரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் 6 மாதங் களுக்கு பிறகு கடந்த மாதம் வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை தொடங்கியது.

ஜப்பான் வரை சென்று தாக்கும் திறன் கொண்டகுரூஸ்வகை ஏவுகணை, ரயிலில் இருந்து ஏவக் கூடிய அதிநவீன ஏவுகணை மற் றும் ஒலியை விட 5 மடங்கு வேக மாக செல்லும் ஹைப்பர் சோனிக் ஏவுகணை என அடுத்தடுத்து புதிய ஏவுகணைகளை சோதித்து அண்டை நாடுகளை அதிர வைத் தது வடகொரியா.

அதன் தொடர்ச்சியாக 30.9.2021 அன்று ஏவுகணையை இடை மறித்து தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணையை சோதித்ததாக வடகொரியா அறிவித்துள்ளது. இந்த ஏவுகணையில் புதிய முக்கிய தொழில்நுட்பங்கள் இணைக்கப் பட்டுள்ளதாகவும், சோதனையின் குறிப்பிடத்தக்க செயல்திறனை ஏவுகணை காட்டியதாகவும் வட கொரியாவின் அரசு ஊடகமான கே.சி.என்.. தெரிவித்துள்ளது.

இது வடகொரியா ஒரு மாதத் தில் நடத்திய 4-வது ஏவுகணை சோதனை என்பது குறிப்பிடத் தக்கது.

தென்கொரியாவுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த ஒருபுறம் சம்மதம் தெரிவித்து விட்டு, மற்றொருபுறம் தொடர்ச்சி யாக ஏவுகணைகளை ஏவி சோதிக் கும் வடகொரியாவின் செயலால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

No comments:

Post a Comment