காற்றிலும் கரோனா பரவும் அபாயம்! வீட்டுக்கு வெளியே வந்து விட்டால் முகக்கவசம் அவசியம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 14, 2021

காற்றிலும் கரோனா பரவும் அபாயம்! வீட்டுக்கு வெளியே வந்து விட்டால் முகக்கவசம் அவசியம்

புதுடில்லி, அக்.14 தென் றல் காற்றிலும் கரோனா பரவும் அபாயம் உள்ள தாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பற்றிய ஆய்வு கள் தொடருகின்றன. அந்த வகையில் மும்பை அய்.அய்.டி. ஆராய்ச்சியா ளர்கள் ஓர் ஆராய்ச்சி நடத்தி உள்ளனர். இதில் வீட்டை விட்டு வெளியு லகுக்கு ஒருவர் வந்து, இருமுகிற போது அதே திசையில் மெல்லிய தென் றல் காற்று சில்லென்று வீசினால் அது கரோனா தொற்றை விரைவாக பரப் பும் என கண்டறிந் துள்ளனர்.

இதுபற்றி ஆராய்ச்சி யாளர் அமித் அகர்வால் கூறும்போது, எங்கள் ஆய்வு முடிவுகள் அடிப் படையில், வீட்டுக்கு வெளியே வந்து விட் டாலே முகக் கவசங்கள் அணிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக சில்லென்று காற்று வீசுகிற சூழலில் கண்டிப் பாக முகக் கவசம் அணிய வேண்டும் என தெரிவித்தார். மேலும் முழங் கையில் இருமுவதும் அல் லது முகத்தை திருப்பிக் கொண்டு இருமுவதும் வெளியே கரோனா பரவு கிற வாய்ப்பைக் குறைக் கும் என்றும் ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்துள் ளனர்.

No comments:

Post a Comment