இரண்டு தவணை தடுப்பூசி போட்ட இந்தியர்கள் இனி தனிமைப்படுத்தல் இல்லை: பிரிட்டன் அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 9, 2021

இரண்டு தவணை தடுப்பூசி போட்ட இந்தியர்கள் இனி தனிமைப்படுத்தல் இல்லை: பிரிட்டன் அரசு

லண்டன், அக். 9- இரண்டு டோஸ் முழுமையாக கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக்கொண்ட இந் தியர்கள் இனி தனிமை படுத்தப்பட மாட்டார் கள் என்று பிரிட்டன் அறிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்லும் இந் தியர்கள் கரோனா தடுப் பூசி முழுமையாக போட் டிருந்தாலும் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண் டும் என்ற தனது முந்தய அறிவிப்பை பிரிட்டிஷ் அரசு விலக்கிகொண்டது.

கோவிஷீல்டு தடுப்பூசி அல்லது பிரிட்டனால் அங்கீகரிக்கப்பட்ட ஏதா வதொரு தடுப்பூசியை முழுமையாக (இரண்டு டோஸ்) போட்டுக் கொண்டவர்கள் வரும் அக்டோபர் 11 முதல் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடு இல்லாமல் அனும திக்கப்படுவார்கள்.

இந்த தகவலை இந் தியாவுக்கான பிரிட்டிஷ் தூதர் அலெக்ஸ் எல்லிஸ் வெளியிட்டுள்ள காணொலியில் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் வரும் திங்கட்கிழமை முதல் சுற்றுலா மற்றும் தொழில் முறையாக இங்கிலாந்து செல்லும் இந்தியர்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் இருக்காது என்று தெளி வுபடுத்தப்பட்டுள்ளது.

இருந்தபோதும் கோவாக்ஸின் தடுப் பூசியை பிரிட்டன் அங்கீ கரித்துள்ளதா என்பது குறித்து அவரது செய்தி யில் விளக்க மளிக்கப்பட வில்லை என்பது குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment