செவ்வாய் கிரகத்தில் நீர்நிலைகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 30, 2021

செவ்வாய் கிரகத்தில் நீர்நிலைகள்!

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வ தற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, பெர்சவரன்ஸ் என்கிற ரோவரை கடந்த ஆண்டு விண்ணுக்கு அனுப்பியது.

கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத் தைப் படம்பிடித்து பூமிக்கு அனுப்பியது.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்தனவா என்பதை ஆராய அங்கி ருந்து பாறை மற்றும் மண்துகள்களை சேகரிப்பதே பெர்சவரன்ஸ் ரோவரின் முக்கியமான பணியாகும்.

ஆனால், பாறை துகள்களை சேகரிக்கும் பெர்சவரன்ஸ் ரோவரின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்ததாக கடந்த ஆகஸ்ட் மாதம் நாசா அறிவித்தது. எனினும், கடந்த மாத இறுதியில் செவ்வாய்கிரகத்தின் ஜெசேரோ பள்ளத்தாக்கில் இருந்து 2 பாறைத் துகள்களை பெர்சவரன்ஸ் சேகரித் தது! அதன் தொடர்ச்சியாக தற்போது செவ் வாய் கிரகத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆறு, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் இருந்ததற்கான அடையாளங்களை பெர்ச வரன்ஸ் ரோவர் படம் பிடித்து அனுப்பி யுள்ளது.

நாசா அந்தப் படங்களை டுவிட்டரில் வெளியிட்டு, “விண்வெளியில் இருந்து, செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வரும் பெர்சவரன்ஸ் ரோவர், நீர்நிலையுடன் இருந்த ஜெசேரோ பள்ளத்தாக்கின் கடந்த காலத்தைப் பற்றிய அற்புதமான குறிப்பு களை எங்களுக்குத் தந்தது! புவியியல் குறித்த இந்த அதிசயங்கள் விஞ்ஞானிகளை உற்சாகமடையச் செய்துள்ளதுஎனத் தெரி வித்துள்ளது!

No comments:

Post a Comment