கிளாஸ்கோ, நவ.5 பருவநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்காத ஜின்பிங், புதின் குறித்து ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.
பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான அய்.நா. உச்சி மாநாடு நடந்தது உலகளாவிய வெப்பநிலையை குறைப்பதில் முக்கிய பங்காற்றப்போகிற இந்த மாநாட்டில், 120-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ள நிலையில், சீன அதிபர் ஜின்பிங்கும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் கலந்து கொள்ளவில்லை.
அவர்கள் தூதுக்குழுக்களை மட்டுமே அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியபோது இதை சாடினார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகத்தின் தலைவராக சீனா புதிய பங்களிப்பு செய்ய முயற்சிக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
ஜின்பிங் கலந்து கொள்ளாதது மாபெரும் தவறு. ரஷ்யாவில் காடு எரிகிறது. ஆனால் அந்த நாட்டின் அதிபர் இதில் வாய் திறக்காமல் அமைதியாக இருக்கிறார்.
புதினின் செயலாளர் திமிட்ரி பெஸ்கோவ், ரஷ்ய அதிபர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டார் என கடந்த மாதம் அறிவித்தபோது, அதற்கான காரணத்தைக் கூறவில்லை.
பருவநிலை மாற்றம், ரஷ்யா முக்கிய முன்னுரிமை அளிக்க வேண்டிய பிரச்சினை ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment