பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசுப் பணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 3, 2021

பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசுப் பணி

ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு..ஸ்டாலின்

சென்னை, நவ.3 பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசுப் பணி ஒதுக்கி அதற்கான பணி ஆணையை முதலமைச்சர் மு.. ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு காகித ஆலையில் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பன் தங்கவேலு வுக்குத் துணை மேலாளர் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கி யோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில் தமிழ்நாட்டின் சேலம் மாவட் டத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார். கடந்த பாராலிம்பிக் போட்டி யில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் இந்தப் போட்டியிலும் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால், அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவருக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல மைச்சர் மு..ஸ்டாலின் உள் ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

கடந்த மாதம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல மைச்சர் மு..ஸ்டாலின் அவர்களை சந்தித்து, தனது வெள்ளிப் பதக்கத் தைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றார் மாரியப்பன். அப்போது அவர், “டோக்கியோ பாராலிம்பிக் தட களப் போட்டியில் தங்கப்

பதக்கம் வெல்ல முடியாமல் வெள்ளிப் பதக்கம் வென்றதில் சிறிது வருத்தம் உள்ளது. எனக்கு அரசுப் பணி வழங்குமாறு முதல மைச்சர் மு.. ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத் துள்ளேன்என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு அரசுப் பணி ஒதுக்கி அதற்கான பணி ஆணையை முதலமைச்சர்  மு..ஸ்டாலின் வழங்கினார்.

No comments:

Post a Comment