சமூக மாற்றத்தின் காரணியாய் - மக்கள்
சமநீதி பெறவேண்டிப் போராடும்
சமகாலத் தலைவரே வீரமணி! - பெரியார்
சிந்தனைப் பட்டறையில் புடம்போட்ட
சொக்கத்தங் கம்எனில் மிகையில்லை!
எவ்வுயிரும் தம்முயிராய் எண்ணுகிற - ஆசிரியர்
இலக்கினின்று வழுவார்; வாழ்த்துகள்!
வஞ்சம் பொய் களவுக் கிரையாகி - அவர்
வாழ்நாளை வீணாக்க விரும்பவில்லை;
பொன்பொருளுக் கலையாமல் நாளெல்லாம் - அவர்
புத்துணர்வு பெறுவதும் தொண்டாலே!
கண்மூடித் தனத்துக்குப் பகையாகி - சுய
கட்டுப்பா டுடன்கடமை ஆற்றுகிறார்;
பேசுவதும் எழுதுவதும் நடைமுறையில் - கண்ட
ஆசிரியரை உளமார வாழ்த்துகிறேன்!
- பட்டுக்கோட்டை தமிழ்அன்பன்
இளைப்பாறிய பேராசிரியர்
No comments:
Post a Comment