இராமேசுவரம், டிச.30 தந்தை பெரியாரின் 48ஆவது ஆண்டு நினைவு தினத்தை (24.12.2021) முன்னிட்டு இராமேசுவரம் பொந்தம்புளி அருகில் கழக மாவட்ட தலைநகர் எம்.முருகேசன் தலைமையில் தந்தை பெரியார் படத்திற்கு மலர்வளையம் வைத்து மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கே.எம்.சிகாமணி, தங்கச்சா மடம் 21ஆவது வார்டு திமுக கவுன்சிலர் எஸ்.பேரின்பம் மண்டல ஒன்றிய செயலாளர் இரா.காமராசு, தி.மு.க. உறுப்பினர் சேசுமிக்கேல் ராஜகுமாரன், கழக நகர தலைவர் பழ.அசோகன், செயலாளர் ரவிச்சந்திரன், குடியிருப்பு தி.மு.க. கிளைச் செயலாளர் கெவின்குமார், இந்திய கம்யூனிஸ்ட் பொறுப்பாளர் ஸ்டின்ஜார்ஜ், குடியிருப்பு கிராம மேனாள் தலைவர் பாண்டி. தே.மு.தி.க. பொறுப்பாளர் நாகசாமி மற்றம் பல தோழர்கள் பங்கு பெற்றனர்.
No comments:
Post a Comment