சீதாராம் யெச்சூரி கண்டனம்
புதுடில்லி,டிச.28- ஜம்மு - காஷ்மீர் தொகுதி மறுவரையறை ஆணையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவ்வாணையம் தனது பரிந் துரை களை அளித்தமைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கண் டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ள தாவது:
ஜம்மு - காஷ்மீர் தொகுதி மறுவரையறை ஆணையத்தின் பரிந்துரைகள் அநீதியானவை; அக்கிரமமானவை! 2011 சென்சஸ் கணக்குபடி காஷ்மீர் மக்கள் தொகை 68.8 லட்சம். ஜம்மு பகுதி மக்கள் தொகை 53.5 லட்சம். இந்த விகிதாச்சாரப்படி காஷ்மீருக்கு 51 தொகுதிகளும் ஜம்முவுக்கு 39 தொகுதிகளும் ஒதுக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், காஷ்மீருக்கு 47 தொகுதிகளும் ஜம்மு பகுதிக்கு 43 தொகுதி களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. காஷ்மீர் பகுதிக்கு இழைக்கப்படும் அநீதி. மேலும் இந்த ஆணை யம் அமைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன் றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஏன் இந்த அவசரம்? இவ்வாறு சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment