புதுடில்லி, ஜன.8 கரோனா தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து, புத் தாண்டு, கிறிஸ்துமஸ் கொண்டாட் டங்கள் மற்றும் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் போன்றவை ரத்து செய்யப் பட்டதால், விருந்தோம்பல் துறை 200 கோடி ரூபாய் இழப்பைசந்தித்துள்ளது.
இது குறித்து, இந்திய ஓட்டல் மற்றும் உணவகங்கள் சங்கங்களின் கூட்டமைப் பான எப்.எச்.ஆர்.ஏ.அய்., தெரிவித்துள்ள தாவது:
புத்தாண்டை ஒட்டி, ஏகப்பட்ட கொண்டாட்ட நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் பெரும்பாலான நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.இதனால், இந்த துறை 200 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளது.
டிசம்பர் 25ஆம் தேதிக்கு பின், 10 முதல் 15 சதவீதம் அளவுக்கே அறைகள் நிரம்புகின்றன. கடந்த ஆண்டு அக்டோ பருக்கு பின், வணிகம் தொடர்ச்சியாக அதிகரித்து வந்தது. டிசம்பர் மத்தியில் 80 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது.ஆனாலும், தற்போது பழைய நிலைக்கு சென்றுவிட்டது. இவ்வாறு எப்.எச்.ஆர்.ஏ.அய்.தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment