தமிழ்நாடு கடலோர கிராமங்களில் 'சாகர் மித்ரா' பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் 600 காலியிடங் களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித்தகுதி: பி.எஸ்சி., (மீன்வள அறிவியல்/கடல் உயிரியல்/ விலங்கியல்) முடித்திருக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பம் துறையில் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது: 1.7.2021 அடிப்படையில் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு.
ஊதியம்: மாதம் ரூ. 10 ஆயிரம். ஊக்கத்தொகை ரூ. 5000 வழங்கப்படும்.
எந்தப்பகுதி: தமிழ்நாடு கடலோர மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: அரசு - மீனவர் இடையே தொடர்பை ஏற்படுத்துதல், அரசின் திட்டங்களை மீனவர்களுக்கு எடுத்து சொல்லுதல், மீன்களை சுத்தமாக கையாளும் விதத்தை எடுத்துரைப்பது இவர்களின் முக்கிய பணி.
விண்ணப்பிக்கும் முறை:
இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
கடைசிநாள்: 12.1.2022
விவரங்களுக்கு: www.fisheries.tn.gov.in
No comments:
Post a Comment