இணைநோய் உள்ளவர்களுக்கு கோவிட் தடுப்பூசி தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 10, 2022

இணைநோய் உள்ளவர்களுக்கு கோவிட் தடுப்பூசி தொடக்கம்

 தமிழ்நாடு முதலமைச்சர்  மு.. ஸ்டாலின் அவர்கள் இன்று (10.1.2022) சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசித் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில்,  குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன்,  இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்  பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்  தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்  .வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்புப் பணி அலுவலர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment