சென்னை, ஜன. 5- இந்தியா வின் முன்னணி மின்சார இரு சக்கர வாகன பிராண் டான ஏத்தர் எனர்ஜி நிறு வனம், அதன் இரண்டா வது சில்லறை விற்பனை நிலையமான ஏத்தர் ஸ்பேசை சென்னை கிண் டியில் துவக்கியது.
தென் சென்னையிலி ருந்து அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், கிண் டியில் உள்ள புதிய அனு பவ மய்யம், ஏத்தர் 450 Plus உடன் இந்தியாவின் அதிவேக மின்சார இரு சக்கர வாகனமான ஏத்தர் 450X அய் விற்பனை செய் யும். சென்னையில் இரண்டு சில்லறை விற்பனை நிலையங்களும், திருச்சி மற்றும் கோயம்புத்தூரில் தலா ஒரு விற்பனை நிலை யங்களுடன் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கடந்த 5 மாதங்களில் தமிழ்நாட் டில் (TN) நான்கு விற் பனை நிலையங்களாக அதன் இருப்பை வளர்த் துள்ளது என இந்நிறுவன தலைமை செயல் அதிகாரி தருண் மேத்தா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment