சென்னை, ஜன.30 சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க 2 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மாதாந்திர பயணச்சீட்டு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், புறநகர் ரயிலில் பயணிக்க இனி தடுப்பூசி சான்று தேவையில்லை என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மாதாந்திர பயணச்சீட்டு வாங்கவும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை இனி காண்பிக்க வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. ரயிலில் வழக்கம் போல முகக் கவசம் அணிந்து தனிமனித இடைவேளியை பின்பற்ற வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Sunday, January 30, 2022
புறநகர் ரயிலில் பயணிக்க தடுப்பூசி சான்று தேவையில்லை : தெற்கு ரயில்வே
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment