டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
உ.பி. உள்ளிட்ட அய்ந்து மாநில தேர்தல் பிப்ரவரி 10 முதல் துவங்குகிறது. முடிவுகள் மார்ச் 10ஆம் தேதி தெரியும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
தமிழ் நாட்டில் நீட் தேர்வு விலக்கினை சட்டப்படி அணுகிட அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு.
பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக ஒன்றிய அரசு டில்லி உயர் நீதிமன்றத்தில் அறிக்கை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
அரசமைப்புச் சட்டம் 25 பிரிவின்படி இந்திய மக்கள் எந்த மதத்தையும் பின்பற்றலாம் என்பதோடு, மதப் பிரச்சாரம் செய்யலாம் என தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இதனை எதிர்ப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்கிறார் ப.சிதம்பரம்
- குடந்தை கருணா
No comments:
Post a Comment