ஏவுகணை தாக்குதலில் உக்ரைனின் விமான நிலையம் முற்றிலும் அழிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 7, 2022

ஏவுகணை தாக்குதலில் உக்ரைனின் விமான நிலையம் முற்றிலும் அழிப்பு

கீவ், மார்ச் 7-  உக்ரைனில் ரசியப் படைகளின் தாக்குதல் கள் தொடர்கின்றன. அந்த நாட்டின் பல்வேறு நகரங்கள் மீதும் ரசியப் படைகள் மூர்க்கத்தனமாக தாக்குதல்களை நடத்தின.

    அந்த வகையில் உக்ரைனின் மேற்கு மத்தியப் பகுதியில் அமைந்துள்ள வின்னிட்சியா நகரில் ரசியப் படைகள் 8 முறை ஏவுகணை தாக்குதல்களை நடத்திய தாகவும், இதில் அந்த நகரில் உள்ள விமான நிலையம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகவும் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில், “அமைதியான மற்றும் நல்ல உள்ளம் கொண்ட வின்னிட்சியாவை அவர்கள் தாக்கினர். விமான நிலையத்தை முழுவது மாக தகர்த்துவிட்டனர். நமது உள்கட்டமைப்பு, நாம் கட்டியெழுப்பிய வாழ்க்கை, மற்றும் நமது பெற்றோர், தாத்தா பாட்டி என உக்ரேனியர்களின் பல தலை முறைகளை அவர்கள் தொடர்ந்து அழித்து வருகின் றனர்” என கூறினார்.


No comments:

Post a Comment