சமூக நீதிப் பயணம் மேற்கொள்ளும் தமிழர் தலைவருக்கு யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்க நிர்வாகிகள் வாழ்த்து-நன்கொடை அளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 2, 2022

சமூக நீதிப் பயணம் மேற்கொள்ளும் தமிழர் தலைவருக்கு யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்க நிர்வாகிகள் வாழ்த்து-நன்கொடை அளிப்பு

'நீட்' தேர்வு ரத்து, ஒன்றிய அரசின் கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பயணத்தை வருகிற ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் ஏப்ரல் 25-ஆம் தேதி வரை கன்னியாகுமரி முதல் சென்னை வரை மேற்கொள்ளும் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களை நேற்று (1.4.2022) சென்னை பெரியார் திடலில் யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் நிர்வாகிகள் கோ.கருணாநிதி (தலைவர்), எஸ்.நடராசன் (பொதுச்செயலாளர்), பி.லோகேஷ் பிரபு (அகில இந்திய நல சங்கத்தின் பொருளாளர்), எஸ்.சத்தியமூர்த்தி (இணை செயலாளர்), ஆலோசகர்கள் எஸ்.சேகரன், ஞா.மலர்க்கொடி, டி.ரவிக்குமார், கே.சந்திரன் ஆகியோர் சந்தித்து,  பூங்கொத்து அளித்து, பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர். நல சங்கத்தின் சார்பில் ரூ.10,000 நன்கொடை அளித்தனர். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உடனிருந்தார். 

 

No comments:

Post a Comment