தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் படத் திறப்புவிழா நிகழ்வினையொட்டிய விழா சிறப்பு மலரை இன்று (10.5.2022) சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட, சட்டமன்றப் பேரவைத் தலைவர்மு.அப்பாவு அவர்கள் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வின் போது நீர்வளத் துறை அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்றப் பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, அரசுக் கொறடா முனைவர் கோவி. செழியன், சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவைச் செயலாளர்
கி. சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment