குடவாசல் ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 07-10-2022 அன்று மஞ்சக்குடியில் சிறப்பாக நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் 1: வருகின்ற 16/10/2022 ஞாயிறு காலை 10 மணிக்கு புதுக்குடியில் ஒன்றிய இளைஞரணியின் விரிவான கலந்துரையாடல் கூட்டத்தை நடத்துவது. தீர்மானம் 2: குடவாசல் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற இருக்கும் பெரியார் பட ஊர்வலத்திலும், தெருமுனை பிரச்சாரத்திலும் அனைத்து இளைஞரணி தோழர்களும் கலந்து கொள்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:
Post a Comment