கொரட்டூரில் ‘விடுதலை' சந்தா சேர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 23, 2022

கொரட்டூரில் ‘விடுதலை' சந்தா சேர்ப்பு

‘விடுதலை' சந்தா சேர்ப்புப் பணிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, கொரட்டூர் பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவுப் பாசறை அரங்கில், 15.10.2022 அன்று காலை 12.30 மணியளவில் நடந்த நிகழ்விற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் ஆகியோர் வருகை தந்தனர். நிகழ்வில் மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டலச் செயலாளர் தே.செ.கோபால், ஆவடி மாவட்டத்தலைவர் பா.தென்னரசு, செயலாளர் க.இளவரசன், இளைஞரணித் தலைவர் வெ.கார்வேந்தன், திருவள்ளூர் மாவட்ட “பெரியார் அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர் சங்கம்” தலைவர் கி.ஏழுமலை, பகுத்தறிவுப் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் ஆகியோர் கலந்துகொண்டனர். 


No comments:

Post a Comment